ஐயோ... ஒரு நொடியில் உயிர் தப்பினாரா? நடிகர் கிரண் ராஜை கீழே தள்ளிய சிங்கம்! அதிர்ச்சி வீடியோ..!!!
அடிக்கு அடிதான் பதிலடி.... தவெகவை அடக்க எடப்பாடி எடுத்த அந்த ஒரு முடிவு! அடுத்தடுத்து ட்விஸ்ட் வைக்கும் அதிமுக...!!!
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் தேர்தல் பரபரப்பை எட்டியுள்ளது. ஏற்கனவே வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், திலகபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் ஏற்பட்ட காலியிடங்களுக்கே தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், அதிமுக இடைத்தேர்தல் வெற்றி கட்சிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இரு தொகுதிகளிலும் களப்பணியை முடுக்கிவிட்ட எடப்பாடி
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாற்றுக் கட்சிக்கு சென்றதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் கூடுதல் நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து, களப்பணிகளை வேகப்படுத்தியுள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணியும் தொடங்கியுள்ளது. வரும் திங்கள்கிழமைக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கட்சி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், தவெக தரப்பில் ஏற்கெனவே வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், திலகபாமா ஆகியோரையே மீண்டும் களமிறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுராந்தகத்தில் பாமக ஆதரவை எதிர்பார்க்கும் அதிமுக
அதிமுக தரப்பில் நடத்தப்பட்ட உள்வட்டாரக் கருத்துக்கணிப்புகளில் தாராபுரம் தொகுதி கட்சிக்கு சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மதுராந்தகத்தில் வெற்றி பெற பாமகவின் ஆதரவு முக்கியமானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் பாமகவுடனான கூட்டணியை வலுப்படுத்தி, அன்புமணி ராமதாஸை நேரடியாக பிரசாரத்தில் ஈடுபடுத்த அதிமுக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், தவெக மேற்கொள்ளும் சமூக வலைதளப் பிரசாரத்தை எதிர்கொள்ளும் வகையில் டிஜிட்டல் பிரசாரத்துக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் எதிர்கால பலத்தை நிரூபிக்கும் களம்?
இந்த இரண்டு தொகுதிகளிலும் கிடைக்கும் வெற்றி, இடைத்தேர்தல் கணக்கை தாண்டி அதிமுகவின் அடுத்தகட்ட அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு கட்சியின் தேர்தல் பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
இரு தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றினால், கட்சிக்குள் தனது தலைமையை மேலும் வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமிக்கு அது சாதகமாக அமையும் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமி வியூகம் எவ்வளவு பலன் தரும் என்பதே தேர்தல் முடிவில் முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் எம். எல்.ஏக்கள் மூலம் விஜய் வைக்கப்போகும் செக்! திமுக, அதிமுக நிலை என்ன? வெளியான ரகசிய தகவல்...!!!