அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை.. கோவை வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பதிலடி!

அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை.. கோவை வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பதிலடி!



ADMK singai ramachandran reply to annamalai

டிடிவி தினகரனின் பக்கம் அதிமுக வந்துவிடும் என அண்ணாமலை பேசுவது தோல்வி பயத்தை காட்டுகிறது என கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் அதிமுக கட்சி அலுவலகத்தில் பேசிய அவர், இந்திய வர்த்தக சபை நடத்திய நிகழ்ச்சிக்கு அனைத்து வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது எனவும் தேர்தல் பிரச்சாரம் காரணமாக அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாது என சொல்லியிருந்தேன் என குறிப்பிட்டார். அதனால் எங்களது பிரதிநிதி பங்கேற்றார்.

annamalai

ஆனால் இதனைப் பார்த்து நான் பயந்துவிட்டதாக பாஜகவினர் பேசிக் கொண்டிருக்கின்றனர். கோவைக்காரனுக்கு பயம் இருக்காது. அண்ணாமலை மட்டுமில்லை அவரது பாஸ் மோடியிடமே பேச தயார் என்று அவர் கூறியுள்ளார். அதிமுகவை அழித்து விடுவேன், டிடிவி தினகரன் பக்கம் அதிமுக வந்துவிடும் என அண்ணாமலை தோல்வி பயத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழக பாஜக தலைவராக 3 ஆண்டுகளாக அண்ணாமலை என்ன சாதித்துள்ளார். நிறைகுடம் எப்போதும் தழும்பாது என்றும் அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்றும் கூறியுள்ளார். பாஜகவிற்கு நோட்டாவுடன் தான் போட்டியே நடக்கிறது என கூறிய அவர், பாஜகவில் உள்ள சீனியர்களை அண்ணாமலை ஒருபோதும் மதிப்பதில்லை என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.