இரவு உணவுக்கு டேஸ்டான சத்தான பச்சை பயிறு குருமா.! ஒரு சொட்டு மிஞ்சாது.!

சுவையான, சத்தான பச்சை பயிறு குருமா அருமையாகவும், எளிதாகவும் செய்யலாம். அதை எப்படி செய்யலாம் என்பதை பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 6
வர மிளகாய் - 2
கடுகு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 கப்
கருவேப்பிலை - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 3 பல்
தண்ணீர் - 3 1\2 கப்
பச்சை பயிறு - 1 கப்
செய்முறை :
முதலில் பச்சை பயிரை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். பின்பு அதில் உப்பு, தண்ணீர் போன்றவற்றை சேர்த்து, வேகவைத்து, மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு போன்றவற்றை சேர்த்து, நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு குக்கரில் அரைத்த விழுதை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதை நன்றாக கொதிக்க வைத்து, எண்ணெயில் கடுகை போட்டு, சின்ன வெங்காயம், வரமிளகாய் போன்றவற்றை சேர்த்து, அதனை குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான குருமா தயாராகிவிடும்.