நாளை ஓடிடியில் வெளியாகிறது மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம்; விபரம் இதோ.!
6 வயது சிறுவனுடன் உறவு கொண்டு, புகைபடங்களை விற்று பணம் சம்பாதித்த இளம்பெண்!
6 வயது சிறுவனுடன் உறவு கொண்டு, புகைபடங்களை விற்று பணம் சம்பாதித்த இளம்பெண்!
பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் ஆறு வயது சிறுவனுடன் உறவுகொண்டு, புகைப்படம் மற்றும் விடீயோக்களை விற்று ஆயிரக்கணக்கில் சம்பாதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள அந்த இளம்பெண்ணுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா, வடக்கு லண்டனில் உள்ள என்ஃபீல்ட் பகுதியில் குடியிருக்கும் 28 வயதான பவுலா டாஸ்-ரீஸ் என்ற இளம்பெண் 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகள் அந்த சிறுவனுடன் உல்லாசமாக இருந்து புகைப்படம் மற்றும் விடீயோக்களை எடுத்துள்ளார். இந்த குற்றத்தை டாஸ்-ரீஸ் ஒப்புக்கொண்டதுடன், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தமது காதலன் ஆண்ட்ரூவிடம் விற்பனை செய்ததையும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு டாஸ்-ரீஸ் மற்றும் ஆண்ட்ரூ ஆகிய இருவரும் ஒரு இணையதளம் மூலம் அறிமுகமாகியுள்ளனர். 53 வயதான ஆண்ட்ரூ பார்க்கர் என்பவரிடம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை சுமார் 64,000 பவுண்டுகளுக்கு விற்பனைனை செய்துள்ளார் அந்த பெண். இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட லூடன் கிரவுன் நீதிமன்றம் இருவருக்கும் சேர்த்து 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதுடன், பெண் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட அதி பயங்கரமான செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சிறுவனை மீட்ட போலீசார் அவனுக்கு சிகிச்சை மற்றும் உளவியல் தெரபி உள்ளிட்டவைகளை அளித்து வருகின்றனர். மேலும், டாஸ்-ரீஸ் இதுவரை கைப்பற்றியுள்ள 64,000 பவுண்டுகள் பணத்தை அவரிடம் இருந்து மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.