குழந்தைகள் தூங்கும் அறையிலேயே உடலுறவு கொள்பவர்களா நீங்கள் ! உடனே படியுங்கள்.

குழந்தைகள் தூங்கும் அறையிலேயே உடலுறவு கொள்பவர்களா நீங்கள் ! உடனே படியுங்கள்.



sex-parents-child

இன்று பெரும்பாலும் கூட்டு குடும்பம் என்பதை களைந்து  தனிக் குடும்பங்களில் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் ஆண் குழந்தையும் சரி பெண் குழந்தையும் சரி 5 முதல் 6 வயது ஆகும் வரை பெற்றோர் தங்கள் அருகிலேயே குழந்தைகளை படுக்க வைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது.

இரவு குழந்தைகள் உறங்கி விட்டதை உறுதி செய்து கொண்டு கணவனும் மனைவியும் உடலுறவில் ஈடுபடுவர். ஆனால் இந்த இடத்தில்தான் ஒரு பிரச்சனை இருக்கிறது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

வெளியிலிருந்து பார்க்கும்போது குழந்தைகள் உறங்கி விட்டதாகவே பெற்றோருக்கு தெரியும். மேலும் பாலியல் தேடல் அவசரத்திலிருக்கும் ஆணும் சரி பெண்ணும் சரி குழந்தை தூங்காத நிலையிலும் தங்களுக்குள்ளேயே குழந்தை தூங்கி விட்டதாக ஒரு எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டு உடல் உறவில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறுகின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.

பெரும்பாலான குழந்தைகள் சிறிய அசைவிலேயே விழித்துக்கொண்டு தந்தையும் தாயும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ரகசியமாக கண்காணிக்க வாய்ப்பு உள்ளது.ஓரளவு விவரம் தெரிந்த குழந்தைகள் தந்தை தனது தாயை துன்புறுத்துவதாகவும் கொலை செய்ய முயல்வதாகவும் கூட கருதிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.

இதேபோல் பெண் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் உடலுறவு என்றாலே எரிச்சலும் கோபமும் ஏற்படுவதற்கான வாய்ப்பும் தாய் தந்தை உடலுறவில் ஈடுபடுவதை காணும்போது ஏற்பட்டுவிடும் என  மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.