மசூதிக்குள்ளேயே தொழுகையின்போது மாரடைப்பால் பிரிந்த உயிர்; முதியவருக்கு நேர்ந்த சோகம்..!



Uttar Pradesh Ghaziabad Aged Man Died Inside Mosque by Heart Attack 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டம், முராத் நகர் பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில் அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஷாஜி ஹனீப் இன்று தொழுகைக்கு வந்தார். 

அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு தொழுகையில் ஈடுபட்டவாறு மயங்கி விழுந்தார். உடனடியாக மசூதியில் இருந்தவர்கள் அனைவரும் அவரை மீட்டனர். 

உடனடியாக முதியவரை மருத்துவமனையில் அனுமதிசெய்தபோது, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பான அதிர்ச்சி காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.