உடற்பயிற்சி செய்தவாறு உயிரிழந்த இளைஞர்; நொடியில் மாரடைப்பால் பறிபோன உயிர்.!



Uttar Pradesh Varanasi Man died Gym During the Workout 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி, ரஞ்சி பகுதியை சேர்ந்த இளைஞர், கடந்த 10 ஆண்டுகளாக அங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில், இன்று காலை அவர் தனது வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த நிலையில், திடீரென உடற்பயிற்சி செய்தவாறு உடலநலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார். 

நொடியில் அவர் சரிந்து விழுந்து மயக்கமடைய, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின் மருத்துவமனையில் அனுமதி செய்தபோது அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது.