ஒரே நாளில் மாறிட்டுச்சே.... விஜய் அரசுக்கு அண்ணாமலை கொடுத்த ஷாக் டிரீட்மென்ட்.... பதறும் தவெக... எகிரும் திமுக..!!!



annamalai-vijay-government-democracy-criticism

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு மீது ‘வி தி லீடர்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை முன்வைத்துள்ள விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. மாற்றுக் கருத்துகளை முன்வைப்பவர்கள் மீது வழக்குகள் தொடரப்படுவதாக அவர் கூறியிருப்பது, சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் தங்களது விளக்கத்தை முன்வைத்துள்ளனர்.

25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கா?

ஆளுங்கட்சிக்கு கிடைக்கும் அதிகாரம், எதிர்க்குரல்களை ஒடுக்குவதற்கான கருவியாக மாறக்கூடாது என்பதே அண்ணாமலையின் முக்கிய குற்றச்சாட்டு. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாற்றுக் கருத்து தெரிவித்த 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் என்பவர் ஒரு கட்சிக்கு மட்டும் பொறுப்பானவர் அல்ல; ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் தலைமை வகிப்பவர் என்பதால், விமர்சனங்களை எதிர்கொள்ளும் அணுகுமுறை ஜனநாயகத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: குறுக்க புகுந்து இவங்க தான் கெடுத்துட்டான்கே.... திமுக ரகுபதியின் வினோத பேச்சை கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த CM விஜய்..! வைரலாகும் வீடியோ..!!!

போலி கணக்குகள் குறித்து தவெக ஆதரவாளர்கள் விளக்கம்

இதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை சுட்டிக்காட்டுகின்றனர். கட்சியின் அதிகாரப்பூர்வ நிர்வாகி ஒருவர் தவறு செய்தால், அவர் மீது கட்சி ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் போலி கணக்குகளை உருவாக்கி, அடையாளத்தை மறைத்து அவதூறுகளை பரப்புபவர்களை கண்டறிந்து கட்டுப்படுத்துவது எளிதான காரியம் அல்ல என அவர்கள் கூறுகின்றனர்.

முதல்வர் விஜய் கடந்த காலங்களிலும் சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அவதூறு எல்லை மீறும்போது சட்டத்தின் வழியில் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க முடியாது என்பதும் அவர்களது வாதமாக உள்ளது. அதேநேரத்தில், தவெக ஆதரவாளர் என்ற அடையாளத்தில் ஒருவர் செய்யும் தவறை வைத்து ஒட்டுமொத்த கட்சியையும் விமர்சிப்பது அரசியல் நோக்கம் கொண்ட அணுகுமுறை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

விமர்சனத்துக்கும் அவதூறுக்கும் வேறுபாடு அவசியம்

சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய கருத்துகளை கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருப்பது ஒருபுறம். அதே சமயம், அரசின் செயல்பாடுகள் குறித்த நியாயமான விமர்சனங்களை தெரிவிப்பதற்கான உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. கருத்துச் சுதந்திரம் மற்றும் பொறுப்பான சமூக வலைத்தளப் பயன்பாடு ஆகிய இரண்டும் சமநிலையில் இருக்கும் போதுதான் ஆரோக்கியமான ஜனநாயக சூழலை உருவாக்க முடியும்.

 

இதையும் படிங்க: அடுத்த பரபரப்பு... தமிழக MP-க்களுக்கு அழைப்பு விடுத்த முதல்வர் விஜய்!!!