தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் போடுவதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் போடுவதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?



Benefits of doing thoppukaranam in tamil

நமது முன்னோர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்த பல்வேறு முக்கியமான விஷயங்களில் ஓன்று இந்த தோப்புக்கரணம். தோப்புக்கரணம் போடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என பலர்கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த தோப்புக்கரணத்தில் அப்படி என்னதான் நன்மைகள் இருக்கு? வாங்க பாக்கலாம்.

பொதுவாக தோப்புக்கரணம் போடும்போது இரண்டு காதுகளின் மடல்களை அழுத்தி பிடித்துக்கொண்டுதான் தோப்புக்கரணம் போடுவோம். இந்த அழுத்தமானது நிலையானதாக இருக்காது, தோப்புக்கரணம் போடும்போது இதன் அழுத்தம் மாறுபடும். இதனால் காதில் பிடித்து உள்ள இடத்தில் உள்ள நரம்புகளின் வழியாக அப்பகுதிக்கான உடல் உறுப்பு தூண்டப்படுகிறது.

Tamil Health Tips

தோப்புக்கரணம் போடும்போது நமது மூளையில் பல்வேறு பயனுள்ள மாற்றங்கள் நடைபெறுகிறது. இதனால் நமது மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட தோப்புக்கரணம் உதவுகிறது. அதேபோல தோப்புக்கரணம் போடும்போது மூளையின் வலது மற்றும் இடது பகுதி இரண்டும் சமமான தூண்டுதல் அடைகின்றது மேலும் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள்  வலுப்பெறுகின்றது.

தோப்புக்கரணம் போடுவதன் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்சி அடைகின்றன. ஆட்டிசம் (ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு  மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு) போன்ற மன இறுக்கம் சம்மந்தமான நோய்களும் தோப்புக்கரணம் போடுவதால் குணமடைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன்னார்.

எனவே இனி தினமும் காலை எழுந்ததும் 5 நிமிடம் தோப்புக்கரணம் போட்டுவிட்டு உங்கள் வேலைகைளை தொடங்குங்கள். அன்றைய நாள் ஆரோக்கியமானதாக அமையும்.