இரயில் பயணத்தில் சாகசம்; ஓடும் இரயிலில் இளைஞர் மின்சாரம் தாக்கி பலி.!



Youth Died by Electric Attack 


இன்றளவில் இளைஞர்கள் ரீல்ஸ் மோகம் உட்பட பல்வேறு காரணத்திற்காக, தங்களின் உயிரை பணயம் வைத்து பல சாகசங்களை செய்ய தொடங்கிவிட்டனர். இவர்களின் சாகசம் சிலநேரம் பலரின் உயிரையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 

ரீல்ஸ் விடோவுக்காக உயிரை பணயம் வைக்க வேண்டாம்:

எப்போதும் தங்களின் கையில் வைத்துள்ள செல்போன் உலகம் என சுற்றி வரும் பலரும், பார்வையாளர்களை வீடியோ வாயிலாக கவர பலகட்ட முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவை சிலநேரம் அவர்களின் உயிருக்கும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்திவிடுகிறது.

இந்நிலையில், இரயில் பயணத்தின்போது இளைஞர் ஒருவர் மின்சார இரயிலின் பக்கவாட்டு பகுதி வழியே மேலே இருக்கிறார். அங்கு ஓடும் இரயிலில் இருந்தவாறு சாகசம் காண்பித்த இளைஞர், நொடியில் மின்சாரம் தாக்கி பலியாகினர்.. 

இளைஞர் மின்சாரம் தாக்கி பலி:

இந்த சம்பவம் எங்கு? நடைபெற்றது என்ற விபரம் இல்லை. ஆனால், தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து இரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.