இந்த பகுதியில் மது, இறைச்சி விற்க தடை!! அதிரடி உத்தரவை பிறப்பித்த முதல்வர்..

இந்த பகுதியில் மது, இறைச்சி விற்க தடை!! அதிரடி உத்தரவை பிறப்பித்த முதல்வர்..



up-government-ban-meat-sale-in-madhura

உத்தர பிரதேசம் மாநிலம் மதுரா பிருந்தாவனம் பகுதியில் மது மற்றும் இறைச்சி விற்பனை செய்ய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தின் மதுரா பிருந்தாவனம் பகுதி பகவான் கிருஷ்ணரின் ஜன்ம பூமியாகக் கருதப்படுகிறது. இதனால் இந்த பகுதியின் புனித தன்மையை கருதி இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

Mutton shop

சமீபத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டத்திற்காக மதுராவுக்குச் சென்ற அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கிருஷ்ண ஜன்ம பூமியான மதுராவில் மது, இறைச்சி விற்க தடை விதிக்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிருஷ்ண ஜன்ம பூமியான மதுரா - பிருந்தாவன பகுதியின் புனித தன்மையை கருத்தில்கொண்டு, அப்பகுதியைச் சுற்றி 10 கி.மீ தூரத்துக்கு இறைச்சி மற்றும் மது விற்க தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடையை முழுமையாக அமல்படுத்த மதுரா மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாகவும், இப்பகுதியைச் சேர்ந்த மது மற்றும் இறைச்சி வியாபாரிகளுக்கு வேறு தொழில் ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.