"அப்பா... விட்ருங்க ப்ளீஸ்..." 13 வயது மகள் பாலியல் பலாத்காரம்.!! வளர்ப்பு தந்தை கைது.!!



step-father-arrested-under-pocso-for-sexual-assault-of

உத்திரபிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

இரண்டாவது திருமணம்

உத்திர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியைச் சேர்ந்தவர் ராம். இவர் அதே பகுதியைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவரை இரண்டாவதாக மறுமணம் செய்திருக்கிறார். மேலும் அந்தப் பெண்ணிற்கு 13 வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. அந்தக் குழந்தை அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளது.

India

பாலியல் பலாத்காரம்

இந்நிலையில் ராம் தனது மனைவியின் குழந்தையிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. வளர்ப்பு தந்தை தன்னை பலாத்காரம் செய்ததை தனது தாயிடம் கூறி அழுதிருக்கிறது குழந்தை.

இதையும் படிங்க: அடப்பாவாமே... அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்.!! மர்ம நபருக்கு வலைவீச்சு.!!

போக்சோவில் கைது

இதனையடுத்து குழந்தையின் தாய் கொடுத்த புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் அந்தக் குழந்தையின் வளர்ப்பு தந்தையான ராமை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: "மயக்கத்தில் இருந்தாலும் வலியை உணர்ந்தேன்..." வென்டிலேட்டரில் கூட்டு பலாத்காரம்.!! ஊழியர்கள் கைது.!!