ஐயோ... கடவுளே! பள்ளி படிக்கட்டில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த 4-ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு! அதிர்ச்சியில் பெற்றோர்... நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி..!!!



school-student-varunika-dies-after-falling-stairs

ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் சோகமான சம்பவம் நடந்துள்ளது. 4-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது மாணவி வருணிகா, பள்ளி படிக்கட்டில் இருந்து கீழே இறங்கியபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பள்ளி நேரத்தில் படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறிய வருணிகா, பல படிகளில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விழுந்ததும் சிறுமி மயக்கமடைந்ததால், அருகில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: பார்க்கும்போது பட படன்னு மனசு துடிக்குது...! லாரி டயரில் இருந்து வந்த புகை மூட்டம்...! அடுத்த நொடி டயர் வெடிச்சு தூக்கி வீசப்பட்ட டிரைவர்...! பஞ்சர் கடையில் நடந்த பகீர் காட்சி!!!!

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி

இதையடுத்து வருணிகாவை அவசரமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இறுதியில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

CCTV-யில் பதிவான படிக்கட்டு விபத்து

மாணவி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த காட்சிகள் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகள் மூலம் பதிவாகியுள்ளன. விபத்து நடந்த விதம் தொடர்பான விசாரணைக்கு இந்தக் காட்சிகள் முக்கிய ஆதாரமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

9 வயது சிறுமியின் உயிரிழப்பு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய நிலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: எப்படியெல்லாம் எமன் வருது பாருங்க! அம்மா என்ன காப்பாத்து... நொடியில் செங்கல் டிராக்டர் லாரி கவிழ்ந்து... 5 வயது சிறுமி துடிதுடித்து பலி! நெஞ்சை உலுக்கும் காட்சி..!!!