மவனே யாருகிட்ட..! கொள்ளையர்களை தலைதெறிக்க ஓடவைத்த சிங்.. வாளை எடுத்து எச்சரிக்கை.. வைரல் வீடியோ.!

மவனே யாருகிட்ட..! கொள்ளையர்களை தலைதெறிக்க ஓடவைத்த சிங்.. வாளை எடுத்து எச்சரிக்கை.. வைரல் வீடியோ.!



Punjab State Lorry Driver Avoid Robbery Attempt on NH Road Video Goes Viral

இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான லாரிகள் இயங்கி வருகின்றன. இவைகளில் பல்லாயிரக்கணக்கான லாரிகள் தொலைதூர பயணங்களை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு லாரிகள் தொலைதூர பயணம் மேற்கொள்ளையில், லாரியில் உள்ள பொருட்களை கொள்ளையடிப்பது, ஓட்டுனர்களை தாக்குவது மற்றும் பணத்திற்காக கொலை செய்வது என பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருகிறது. 

லாரி ஓட்டுனர்களின் சுதாரிப்பு அதிகரித்து இருந்தாலும், தேசிய நெடுஞ்சாலைகள் முதல் உள்ளூர் கிராம சாலைகள் வரை காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தாலும், லாரிகளை குறிவைத்து திருட்டு மற்றும் மோசடி குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுத்தான் வருகிறது. பெரும்பாலும் வடமாநிலங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து இங்கு வரும் லாரிகளை குறிவைத்து குற்றச்சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. 

இவற்றில், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் வழிப்பறி குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது என்பது ஓட்டுனர்களின் மனவேதனை. தமிழகத்திலும் கடந்த காலங்களில் ஓடும் லாரியில் கொள்ளை சம்பவம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வழியாக லாரி ஓட்டுனர்கள் பயணிக்க அச்சப்பட்ட காலங்களும் இருக்கின்றன. 

இந்த நிலையில், முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த லாரி ஓட்டுநர் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டு இருந்த நிலையில், லாரியை இடைமறித்த காரில் வந்த வழிப்பறி கும்பல், லாரி ஓட்டுனரை தாக்கி கொள்ளையடிக்க முயற்சிக்கிறது. 

முதலில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய லாரி ஓட்டுநர், ஒருகட்டத்தில் கும்பலின் அடாவடியால் ஆவேசமாகி தனது சுய பாதுகாப்புக்காக நீண்ட வாளினை எடுத்து காண்பிக்கிறார். அதனைக்கண்ட திருட்டு கும்பலோ தலைதெறிக்க ஓடி காரில் ஏறி தப்பி செல்கிறது. இந்த வீடியோ சித்தரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல் தெரியவரும் நிலையில், பாதுகாப்பாக பஞ்சாப் ஓட்டுநர் வாளினை எடுத்து காண்பித்து திருடர்களை பதைபதைக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.