பரவத்தொடங்கும் நிபா.. தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு.. உச்சகட்ட அலர்ட்!



Nipah Virus Alert: Tamil Nadu Intensifies Border Surveillance Amid Kerala Outbreak

தமிழக எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

களசோதனை:

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் இதுவரை ஒருவருக்கு நிபா உறுதி செய்யப்பட்டுள்ளது. 77 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். இதனிடையே, தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கேரளா - தமிழ்நாடு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு உடைகள் அணிந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Warning: எலி கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?.. அலட்சியமாக இருக்காதீங்க.. உயிருக்கே உலை வைக்கும்.!

பரவும் நிபா:

கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பயணிகளிடம் காய்ச்சல் அறிகுறி உள்ளதா? எனவும் சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனைக்குப்பின்னரே வாகனங்கள் தமிழகத்துக்கும் அனுமதி செய்யப்படுகின்றன. கடந்த 2018ல் கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா, தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பரவி வருகிறது. 

KERALA

ஷிகெல்லா பாக்டீரியா:

இதனிடையே, கேரளாவில் ஷிகெல்லா எனப்படும் வைரஸ் தொற்றும் பரவி வருகிறது. இந்த வைரஸால் பள்ளி மாணவி பாதிக்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் & நண்பர்கள் என 9 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் தொடர்பில் இருந்த 514 மாணவ-மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வவ்வால் எச்சம் அல்லது உமிழ்நீர் இருந்த பழங்களை நன்கு கழுவாமல் அல்லது காய்கறிகளை வேகவைக்காமல் சாப்பிடுவதால் நிபா பரவுகிறது.

அறிகுறிகள்: 

அதிக காய்ச்சல், தலைவலி, தசைவலி, தொண்டை வலி, மயக்கம், வாந்தி, மனக்குழப்பம், மூச்சுத்திணறல். உரிய சிகிச்சை இல்லாத பட்சத்தில் கோமா ஏற்படும்.

இதையும் படிங்க: பெற்றோர்களே கவனம்.. 4 வயது சிறுமி அடினோ வைரசுக்கு பலி.. நெல்லையில் சோகம்.!