"விடாமல் துரத்திய கள்ளக்காதல்..." கழுத்தை நெரித்து கணவன் கொலை.!! மனைவி, காதலன் வெறி செயல்.!!
திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இறந்த நபரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள சொக்குபிள்ளைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(45). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி பழனியம்மாள்(35) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் பழனியம்மாளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். பழனியம்மாள் மற்றும் சூர்யா இடையேயான கள்ளத்தொடர்பை பற்றியறிந்த மாரியப்பன் தனது மனைவியிடம் கள்ளக்காதலை விட்டு விடும்படி வற்புறுத்தியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து மாரியப்பன் மற்றும் பழனியம்மாள் ஆகியோர் சிலுக்குவார்பட்டிக்கு வந்து வாடகைக்கு வீடெடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மாரியப்பன் மயக்கமடைந்ததாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மாரியப்பனின் கழுத்து பகுதியில் காயமிருந்ததால் மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் இறந்த மாரியப்பனின் உடலை சோதனை செய்தனர்.
இதையும் படிங்க: "என் கூட வரமாட்டியா...." உறவுக்கு அழைத்த கணவன் கொலை.!! மனைவி, கள்ளக்காதலன் வெறி செயல்.!!
இதனையடுத்து அவரது உடலை நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக மாரியப்பனின் மனைவி பழனியம்மாளிடம் காவல்துறை கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து படுகொலை செய்ததை மாரியம்மாள் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பழனியம்மாள் மற்றும் சூர்யாவை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: "காதல் பண்ண விட மாட்டியா..." கணவன் குத்தி படுகொலை.!! மனைவி கள்ளக்காதலன் கைது.!!