17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 30 வயது நடத்துனர் கைது.. ஓடும் பேருந்தில் நடந்த கொடுமை.!

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 30 வயது நடத்துனர் கைது.. ஓடும் பேருந்தில் நடந்த கொடுமை.!


Maharashtra Pune 17 Aged School girl Raped by PMPML Bus Conductor

ஓடும் பேருந்தில் நடத்துனரால் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் செயல்பட்டு வரும் பிரதான பள்ளியில், 17 வயதுடைய சிறுமி 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர், நேற்று மதியம் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்துள்ளார்.

புனே மாநகராட்சிக்கு சொந்தமான அரசு பேருந்தில் சிறுமி பயணம் செய்துகொண்டு இருந்த நிலையில், பேருந்தின் நடத்துனராக பணியாற்றிய 30 வயது நபர் சிறுமியிடம் ஆபாச செய்கை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

maharashtra

மேலும், சிறுமியிடம் ஒரு கட்டத்தில் அவரின் உடலின் அங்கத்தை தொட்டு பாலியல் தொல்லை அளித்த நிலையில், பேருந்திற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கயவனிடம் இருந்து தப்பி பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, சிறுமியுடன் பண்ட் கார்டன் காவல் நிலையத்திற்கு சென்ற பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடத்துனரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.