பச்ச பிள்ளைய சீரழிச்சுட்டீங்களேடா.. 11 வயது சிறுமி 6 பேர் கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம்..! அதிரவைக்கும் சம்பவம்..!

பச்ச பிள்ளைய சீரழிச்சுட்டீங்களேடா.. 11 வயது சிறுமி 6 பேர் கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம்..! அதிரவைக்கும் சம்பவம்..!



jharkhand-girl-raped-by-6-boys

11 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததற்காக, 6 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி மாவட்டத்தில் 11 வயது சிறுமி பக்கத்து கிராமத்தில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அங்கு நடந்த நடன நிகழ்ச்சியில், 15 வயது சிறுவர்களுடன் இவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருமணம் முடிந்தபின் இரவு தனது நண்பர்களுடன் சிறுமி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமியை பின்தொடர்ந்த சிறுவர்கள், அவரை ஒரு தனியான இருட்டான இடத்திற்கு இழுத்துச் சென்ற நிலையில், ஆறு சிறுவர்களும் ஒருவர் பின் ஒருவராக கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

Jharkhand

இதுகுறித்து அங்கிருந்து தப்பி வந்த சிறுமியுடன் இருந்த இரண்டு நண்பர்களும், சிறுமியின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட மயங்கிக் கிடந்தார்.

அத்துடன்  சிறுமியின் பெற்றோரை கண்ட சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அவர்கள் மீது சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் 10 வயது முதல் 15 வயதுவரை உள்ள 6 சிறுவர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.