கள்ளக்காதல் வெறி.!! "கணவனை கொன்று பாம்பை கடிக்க விட்ட கொடூரம்..." மனைவி, காதலன் கைது.!!



illicit-relationship-murder-police-found-foul-play-woma

உத்திரபிரதேச மாநிலத்தில் கணவரை கொலை செய்துவிட்டு பாம்பு கடித்ததாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த கொலை சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்காதல்

உத்திர பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்தவர் அமித். இவருக்கு ரவீதா என்ற பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவரது மனைவி ரவீதாவிற்கு அமர்தீப் என்ற நபருடன் திருமணத்தை மீறிய கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமர்தீப் மற்றும் ரவீதா ஆகியோர் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர். இதனைத் தெரிந்து கொண்ட அமித் தனது மனைவி ரவீதாவை கண்டித்திருக்கிறார்.

India

பாம்பு கடித்து இறந்ததாக நாடகம்

தனது கணவன் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்து கட்ட ரவீதா முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து தனது காதலன் அமர்தீப்புடன் சேர்ந்து கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடினார். இந்நிலையில் இறந்த அமித் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் அவரது இறப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையும் படிங்க: "அப்பா... விட்ருங்க ப்ளீஸ்..." 13 வயது மகள் பாலியல் பலாத்காரம்.!! வளர்ப்பு தந்தை கைது.!!

காவல்துறை விசாரணையில் வெளிவந்த உண்மை

பிரேத பரிசோதனை அறிக்கையில் அமித் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரவீதா மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் தனது கணவன் கொலை செய்யப்பட்ட பிறகு அவரது பிணத்தை பாம்பை கடிக்க வைத்து நாடகமாடியதையும் காவல்துறையிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ரவீதா மற்றும் அமர்தீப்பை கைது செய்துள்ள காவல் துறையினர் சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: உபியில் பயங்கரம்... ஆசையாக சென்ற காதலன்.!! ஆணுறுப்பை அறுத்த காதலி.!! பின்னணி என்ன.?