பழைய பதிவால் புதிதாக வெடித்த வெடிகுண்டு! விஜய் சேதுபதியின் மறைமுக பேச்சால் கடும் எதிர்ப்பு..!!!
முதலிரவில் திடீரென காணாமல் போன மணமகன்… மனைவி கூறிய ஒரு வார்த்தைக்குப் பிறகு நடந்த அதிர்ச்சி!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் திருமணம் நடைபெற்ற அன்றே மணமகன் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த மொஹ்சின் என்ற இளைஞருக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமண சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர், புதுமணப்பெண்ணுடன் அவர் தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அன்று இரவு முதலிரவுக்காக புதுமணப்பெண்ணும் மொஹ்சினும் அறையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அறையின் வெளிச்சத்தைக் குறைப்பதற்காக மனைவி, மொஹ்சினிடம் விளக்கை அணைக்குமாறு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிறந்த வீட்டிலிருந்து திரும்பிய 5 நாட்களில் விபரீதம்! 22 வயது இளம்பெண் மர்ம மரணம்!
இதையடுத்து விளக்கை அணைக்க அறையை விட்டு வெளியே சென்ற மொஹ்சின், அதன் பின்னர் மீண்டும் அறைக்குத் திரும்பவில்லை என கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் அவர் வராததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் மொஹ்சினை கண்டுபிடிக்க முடியாததால், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும், மொஹ்சினின் இரு சகோதரிகளுக்கும் அதே நாளில் திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. ஒரே நாளில் குடும்பத்தில் திருமண நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், மணமகன் திடீரென மாயமானது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மொஹ்சின் சென்றிருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அருகிலுள்ள கங்கை கால்வாய் பகுதிகளிலும் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருமணம் நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே மணமகன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆபாச படங்களுக்கு அடிமையான சிறுவன்.. ஆசிரியையின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!