வாலிபரை காரில் கடத்திச்சென்று மாறி மாறி பலாத்காரம் செய்த 4 இளம்பெண்கள்.! உச்சகட்ட அதிர்ச்சி.!

வாலிபரை காரில் கடத்திச்சென்று மாறி மாறி பலாத்காரம் செய்த 4 இளம்பெண்கள்.! உச்சகட்ட அதிர்ச்சி.!



four women abused young boy


பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் வாலிபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்துள்ளது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த இளம்பெண்கள் ஒரு துண்டு சீட்டை கொடுத்து அந்த நபரிடம் முகவரி கேட்டுள்ளனர். 

இதனையடுத்து அந்த வாலிபர் அந்த சீட்டை வாங்கி படித்துள்ளார். அப்போது அந்த பெண்கள்திடீரென  ஸ்பிரே ஒன்றை எடுத்து அந்த நபரின் முகத்தில் அடித்துள்ளனர். இதனையடுத்து அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை தங்களது காரில் ஏற்றிக்கொண்டு அப்பெண்கள் ஒரு மறைவான இடத்தில் காரை நிறுத்தி அவரது கை, கால்களை கட்டி போட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

அப்பெண்களால் பாதிக்கப்பட்ட அந்த நபர் கூறுகையில், அவர்கள் மது அருந்திவிட்டு தன்னையும் குடிக்க வற்புறுத்தியதாகவும், பின்னர் நான்கு இளம்பெண்களும் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் அவரது கை மற்றும் கண்களை கட்டி ஏதோ ஒரு இடத்தில் இறக்கிவிட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த இளம்பெண்களைத் தேடும் பணியில் போலீசார்.