#BigNews: 14 குழந்தைகளுக்கு கொரோனா... மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.. அதிர்ச்சி தகவல்.!
#BigNews: 14 குழந்தைகளுக்கு கொரோனா... மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.. அதிர்ச்சி தகவல்.!
16 வயதுக்கு கீழ் உள்ள 14 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் தொற்றானது படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து, மக்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், எஞ்சியுள்ள முகக்கவசம் தொடர்பான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, விருப்பம் இருப்பின் தனிநபர் அணிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் நாளொன்றுக்கு சொற்ப எண்ணிக்கையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு வந்தாலும், 14 சிறார்களுக்கு நேற்று கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். பல சிறுவர்களுக்கும் இணை நோய்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.