ஒரே ஒரு இரவில் மாறிய படுக்கை! பாய்ந்த 4 குண்டுகளால் மாமியாருக்குப் பதில் மருமகள் பலி.... கொழுந்தனின் காதல் திருமணத்தால் நடந்த கொடூரம்...!!!



bihar-muzaffarpur-love-marriage-revenge-murder

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் காதல் திருமணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட குடும்ப தகராறு, துப்பாக்கிச் சூடு கொலையாக மாறியுள்ளது. பழிவாங்கும் நோக்கில் வீட்டிற்குள் நுழைந்து நடத்தப்பட்ட தாக்குதலில் மீனா தேவி (35) என்ற பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முசாபர்பூர் மாவட்டத்தின் சாகேப்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட கோடா கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 3 பொண்டாட்டி புருஷன்! இருந்தாலும் ஆசை அடங்கல....எனக்கு கிடைக்காதவள் உனக்கு இல்ல! இளையருக்கு கடைசியில் கேஸ் சிலிண்டர் மூலம் போட்ட பிளான்....சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி

காதல் திருமணத்தால் ஏற்பட்ட மோதல்

தகவலின்படி, மீனா தேவியின் கொழுந்தன் சுதீர் பாஸ்வான், அதே கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் பாஸ்வானின் மகளைக் காதலித்து குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த ரஞ்சித் பாஸ்வான், சுதீரின் குடும்பத்தினரிடம் பழிவாங்க திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இருட்டில் தவறாக நடந்த துப்பாக்கிச் சூடு

சம்பவத்தன்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில், ரஞ்சித் பாஸ்வான் துப்பாக்கியுடன் சுதீரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது சுதீரின் தாய் வழக்கமாக உறங்கும் கட்டிலில், அன்று மீனா தேவி படுத்திருந்ததாக கூறப்படுகிறது.

இருட்டில் அடையாளம் தெரியாமல், சுதீரின் தாய் என்று நினைத்து ரஞ்சித் பாஸ்வான் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 4 குண்டுகள் பாய்ந்ததால் மீனா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அன்று மட்டும் படுக்கை மாற்றி உறங்கியதால் சுதீரின் தாய் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவலில் முக்கிய குற்றவாளி

துப்பாக்கிச் சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வருவதற்குள் குற்றவாளி அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவல் அறிந்த போலீசாரும் தடயவியல் நிபுணர்கள் குழுவும் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ரஞ்சித் பாஸ்வானை போலீசார் பின்னர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் கோடா கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.