நடனமாடியவாறே மயங்கி விழுந்து உயிரிழந்த இளைஞர்; அதிர்ச்சியூட்டும் வீடியோ உள்ளே.!



Andhra Pradesh Youngster Died While Dancing 

 

ஆந்திரப்பிரதேசம்: ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் - தர்மாவரம் புதன்கிழமை இரவு கணேஷ் மண்டபத்தில் நடனமாடியபோது பிரசாத் (26) என்ற இளைஞர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்யசாய் மாவட்டம், தர்மாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 26). அப்பகுதியில் நடந்த விழா நிகழ்ச்சியில் தனது நண்பருடன் இரவு நேரத்தில் பிரசாத் நடனமாடிக் கொண்டிருந்தார். 

அப்போது அவர் நடனமாடியவாறு திடீரென நிலை குலைந்து சரிந்து மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு, பிரசாத் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.