நண்பரின் உடலை துணியால் சுற்றி தெருவில் வீசிவிட்டு தப்பிய வாலிபர்! சிசிடிவியை பார்த்து உறைந்துபோன போலீசார்..!!!



amritsar-youth-body-drug-overdose-cctv-arrest

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அதிகாலையில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் தெருவில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கோட் கல்சா பகுதியில் நடந்த இந்த வழக்கில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் முக்கிய துப்பை கண்டுபிடித்து, உயிரிழந்தவரின் நண்பரைக் கைது செய்துள்ளனர்.

சிசிடிவியில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை

அமிர்தசரஸின் கோட் கல்சா பகுதியில் உள்ள தாகியா வாலி தெருவில் கிடந்த சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த சுகிந்தர் சிங் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்தைச் சுற்றியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதையும் படிங்க: விவகாரத்து பெற்ற பெண்ணிடம் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப்படுத்திய நபர்! இரவில் பேசுவதாக அழைத்து செய்த கொடூரம்.... ரூ.1000 நீல நிற ட்ரம்பில் ஒளிந்திருந்த மர்மம்! திடுக்கிடும் பின்னணி..!!!

போதைப்பொருள் ஓவர்டோஸ் காரணமா?

விசாரணையில் கிடைத்த தகவலின்படி, சுகிந்தர் சிங் தனது நண்பர் குல்தீப் சிங்குடன் இருந்தபோது அளவுக்கு அதிகமான போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அங்கேயே உயிரிழந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உடலை தெருவில் வீசி தப்பிய நண்பர் கைது

நண்பர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பதற்றமடைந்த குல்தீப் சிங், வீட்டிலிருந்து துணி ஒன்றை எடுத்து வந்து உடலை அதில் சுற்றி, தோளில் சுமந்து சென்று தெருவில் வீசிவிட்டு தப்பிச் சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து அமிர்தசரஸ் துணை காவல் ஆணையர் ரவீந்தர் பால் சிங் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் போதைப்பொருள் ஓவர்டோஸ்தான் உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளதாகவும், பயம் காரணமாக நண்பர் உடலை அங்கு வீசிச் சென்றதாகவும் கூறினார். இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே உயிரிழப்புக்கான இறுதி காரணம் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: வேலைக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு தனியார் விடுதியில் காதலனுடன் இருந்த 18 வயது இளம்பெண்! மதிய உணவுக்கு பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்.... திருச்சியில் அரங்கேறிய பயங்கரம்..!!!