ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்! உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை!

ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்! உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை!



amit shah talk about andian army


மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் வரும் 21 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பாஜக, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மராட்டிய மாநிலத்தின் சங்லி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தியும், சரத் பவாரும் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

amit shah

மேலும், காஷ்மீர் விவகாரத்தில் பாரத பிரதமர் மோடி சிறப்பான பணியை செய்துள்ளதாக பாராட்டினார். ஆனால்  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த முடிவை காரணமில்லாமல் எதிர்த்து வருகின்றனர் என கூறினார்.

மோடியின் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் மீதான உலகத்தின் பார்வை மாறியுள்ளது. மேலும், ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் எனவும் அமித்ஷா பேசினார்.