அச்சத்தில் மக்கள்! மீண்டும் தலைதூக்கும் கொரோனாவால் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதா..? சுகாதாரத்துறை அளித்த விளக்கம்...



"Tamil Nadu Health Department Clarifies on COVID Restrictions Rumors"

கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கும் சூழல் உருவாகிறதா என்ற கேள்வி சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகள் வருவதாகவும், பொதுமக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப நேரிடும் எனக் கூறும் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

COVID-19 restrictions Tamil Nadu

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இது தொடர்பாக முக்கியமான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பலம் குறைந்ததாகும். இது கட்டுப்படுத்தக்கூடியதுமான தொற்று என்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று சுகாதாரத்துறை உறுதியளித்துள்ளது.

COVID-19 restrictions Tamil Nadu

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் குறைவாகவே உள்ளது. கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போலவே சில முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இது புதிய கட்டுப்பாடுகள் அல்லது ஊரடங்கு உத்தரவு என்பதல்ல.

இதையும் படிங்க: நடிகை கீர்த்தி சுரேஷ் செய்த விஷயத்தை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! இணையத்தில் வைரலாகும் காமெடி வீடியோ!!

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் மத்திய அரசு சுமார் ஒரு எச்சரிக்கை மட்டுமே விடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் எந்தவித புதிய கட்டுப்பாடுகளும் பரிந்துரை செய்யப்படவில்லை. கடந்த கொரோனா காலத்தில் போலி செய்திகள் பரவியதை போலவே தற்போது சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

 வீடுகளை அடைப்பது, அல்லது தொற்றாளரை தனியாக அழைத்து செல்வது போன்ற எந்தவொரு கட்டுப்பாடுகளும் தற்போது விதிக்கப்படவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத வரை, பொது மக்கள் சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: பட்டு வேட்டி சட்டையில் புதிய காதலியுடன் ரவி மோகன்! மனைவி ஆர்த்தி கோபத்தில் குமரி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை....