பட்டு வேட்டி சட்டையில் புதிய காதலியுடன் ரவி மோகன்! மனைவி ஆர்த்தி கோபத்தில் குமரி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை....



jayam-ravi-aarthi-statement-kenisha-relationship

நடிகர் ஜெயம் ரவி, தற்போது “ரவி மோகன்” என்ற பெயரில் தனது சினிமா பயணத்தை தொடர்ந்துவருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தனது மனைவி ஆர்த்தியுடன் பிரிந்து செல்லும் முடிவை அவர் எடுத்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர்கள் பிரிவுக்கு பாடகி கெனிஷா காரணம் என்ற சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் இருவரும் அதை மறுத்தனர். இந்நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமண விழாவில், ரவி மோகன் மற்றும் கெனிஷா ஜோடியாக கைகோர்த்து வந்தனர். இதனால் அவர்களுக்கிடையேயான உறவு உறுதி பெற்றதென வலியுறுத்தப்படுகிறது.

இதனைக் கூறி, ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வெளிப்படையான அறிக்கையை வெளியிட்டுள்ளார். "ஒரு வருடமாக என்மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு நான் எந்த பதிலும் கூறவில்லை. ஆனால் தற்போது உலகமே உண்மையை புரிந்துகொண்டு இருக்கிறது," என அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: திடீரென 100 ஆண்டுகள் பழமையான தேவாலயம் சென்ற நடிகை நயன்தாரா! வைரல் புகைப்படங்கள்...

மேலும், “என்னை ரவி மோகனின் முன்னாள் மனைவி எனக் குறிப்பிட வேண்டாம். நாங்கள் இன்னும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை,” எனவும் மீடியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல், "ஒரு அப்பாவாக ரவி மோகன், தனது பிள்ளைகளை புறக்கணித்து விட்டார். நாங்கள் இருவரும் சேர்ந்து கட்டிய வீட்டை கூட அவர் பேங்க் மூலமாக காலி செய்ய வைத்தார்," எனவும் அவர் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

இதையும் படிங்க: தாய்பாலில் மகனுக்கு தங்க நகையா! மகனுக்கு இந்திரஜா கொடுத்த அதிசய பரிசு! அது எப்படி செய்றாங்கனு காணொளியில் பாருங்க......