மகளை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த எஸ்.பி.பி! அவரது மகன் சரண் வெளியிட்ட உற்சாக தகவல்!

மகளை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த எஸ்.பி.பி! அவரது மகன் சரண் வெளியிட்ட உற்சாக தகவல்!



saran-report-about-his-father-health-condition

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி தீவிர சிகிச்சை பிரிவில்  எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்தார்.

பின்னர் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு நினைவு திரும்பிவிட்டதாகவும் சமீபத்தில் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.  மேலும் அவரது மகன் எஸ்பிபி சரணும் நாள்தோறும் தனது தந்தையின் உடல்நிலை குறித்து தெரியப்படுத்தி வருகிறார்.

SPB

இந்நிலையில் தந்தையின் உடல் நலம் குறித்து எஸ்.பி.பி.சரண் நேற்று கூறியதாவது, அப்பாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதுடன், முன்னேற்றத்துக்கான அறிகுறிகளும் தெரிகிறது. இன்று நானும், எனது சகோதரியும் மருத்துவமனைக்கு சென்று அப்பாவை பார்த்தோம். சகோதரியை பார்த்ததும் அப்பா பெரும் மகிழ்ச்சி அடைந்தார் எனக் கூறியுள்ளார்.