என்ன கொடுமை இது! கடும் சோகத்தில் கண்ணீர்விடும் நடிகை ராதிகா! மனதை நொறுங்க வைக்கும் வேதனையான வீடியோ!!



radhika-shares-corono-affected-man-video

இந்தியாவில் கடந்த ஆண்டு பரவத் துவங்கிய கொரனோ வைரஸ் இடையில் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது அலையாக தீவிரமாக பரவத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல், மருந்து இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் தவித்து நிற்கும் அவலமும் நேர்ந்து வருகிறது.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் சார்தாபென் மருத்துவமனைக்கு வெளியே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மகனை சாலையில் படுக்க வைத்து  மருத்துவமனையில் பெட் கிடைக்காதா என ஏக்கத்துடன் பக்கத்தில் அவரது அம்மா அமர்ந்துள்ளார். மேலும் அவரை ஆம்புலன்சில் அழைத்து வராததால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துள்ளார்களாம்

அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த நடிகை ராதிகா எனக்கு கோபமாக வருகிறது.  அதே நேரம் எதுவும் செய்ய முடியாத நிலை என தெரிவித்து கண்ணீர் தாரை தாரையாக விடும் எமோஜியை  வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட பலரும் ஆவேசமாக கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.