நடிகையை பார்ப்பதற்காக 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்..! விஷயம் அறிந்து நடிகை செய்த நெகிழ்ச்சி காரியம்..!

நடிகையை பார்ப்பதற்காக 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்..! விஷயம் அறிந்து நடிகை செய்த நெகிழ்ச்சி காரியம்..!


Pooja hegdes fan slept at street for 5 days

தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழ் சினிமாவில் முதல் படத்திலையே ஓரங்கட்டப்பட்ட இவர் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவரும் இவர் கோடிகளில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூஜா ஹெடேவின் தீவிர ரசிகர் ஒருவர் பூஜாவை பார்ப்பதற்காக ஆந்திராவிலிருந்து மும்பைக்கு சென்றுள்ளார். எவ்வளவு முயன்றும் பூஜாவை பார்க்க முடியவில்லை. எப்படியும் அவரை பார்த்தே தீரவேண்டும் என பூஜா வீடு இருக்கும் தெருவில் 5 நாட்களாக சாலையில் படுத்து தூங்கியுள்ளார்.

Mystery

தனது ரசிகர் ஒருவர் தன்னை பார்ப்பதற்காக தெருவில் படுத்து தூங்கும் தகவல் அறிந்த பூஜா உடனே அவரை வரவைத்து அவருடன் உரையாடியுள்ளார். மேலும், இதுகுறித்து தனது சமூகவலைதளப்பாக்கத்தில் நீங்கள் கஷ்டப்படுவது எனக்கு வருத்தமளிக்கிறது. நீங்கள் தெருவில் தூங்குவதை நான் விரும்பவில்லை. நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அன்பை நான் உணர்வேன். என்னுடைய பலமே நீங்கள் தான் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.