தனது திருமணம் பற்றி பேசிய ஓவியா-அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தனது திருமணம் பற்றி பேசிய ஓவியா-அதிர்ச்சியில் ரசிகர்கள்!


oviya speak about her marriage

களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகனவர் நடிகை ஓவியா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் ஓவியா. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பிறகு அதிக வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்ப முதல் இவரது பேச்சு, நடவடிக்கை , டான்ஸ் போன்றவற்றால் ரசிகர்கள் குவிந்தனர். ஒருகட்டத்தில் ஓவியா ஆர்மி அமைத்து ஓவியாவை கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

oviya

மேலும் இவர் பிக்பாஸ் முதல் சீசனில் நடிகர் ஆரவ்வை காதலிப்பதாக கூறினார். ஆனால் அவர் ஏத்துக்கொள்ளாததால் அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறினார்.

அதன் பிறகும் அவர்கள் காதலில் இருப்பதாக செய்திகள் அடிக்கடி வருகின்றன. இந்நிலையில் நேற்று களவாணி 2 படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய ஓவியாவிடம் திருமணம் பற்றி செய்தியாளர்கள்கேட்டுள்ளனர் .

"நான் திருமணம் செய்யபோவதில்லை. ஆண் துணை தேவையில்லை. இப்படி இருப்பதே நன்றாக உள்ளது" என பதில் அளித்துள்ளார் ஓவியா.