பாலியல் தொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்ட இளைஞர்! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்.

பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொள்ள ஆசை பட்டு அந்த பெண்ணிடம் அதை கூற, அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் அந்த பெண்ணை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த 35 வயதான ஒருவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவரை சந்தித்துள்ளார். அந்த பெண்ணிடம் மயங்கிய அந்த ஆண், அந்த பெண்ணிடம் பாலியல் தொழிலை விட்டுவிடும்படியும், தான் உன்னை திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், அந்தப்பெண் தன்னால் பாலியல் தொழிலை கைவிட முடியாது எனவும், அவரை திருமணம் செய்துகொள்ளவும் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அந்த பெண்ணை கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Delhi: Delhi police special cell has arrested a 32-year-old man who had murdered a sex worker on 20 August. The man, who is married and has three children, wanted to marry the woman and had been forcing her to quit her work; she had refused his proposal. pic.twitter.com/rMti64B0Sn
— ANI (@ANI) August 31, 2019