வேறொரு பெண்னை தொட்டு டூயட் பாடிய சுந்தர் சி!. அதை பார்த்து பதறிய குஷ்பு! குஷ்புவின் ஓப்பன் டாக்!.

வேறொரு பெண்னை தொட்டு டூயட் பாடிய சுந்தர் சி!. அதை பார்த்து பதறிய குஷ்பு! குஷ்புவின் ஓப்பன் டாக்!.



kushbu feel for sundar c

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது சன் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் யாரேனும் பிரபலங்கள் கலந்துகொள்வார். அவர்களோடு  ஏதேனும் ஒருவகையில் மிகவும் பாதிக்கப்பட்டு, உதவ யாரும் இல்லாமல் அவதிப்பட்டு வரும் மக்கள் கலந்துகொண்டுகொண்டு தங்களது கஷ்டங்களை பகிர்ந்து கொள்வர். 

இதனை கேட்கும் பிரபலம் ஏதேனும் வேலை செய்து பணம் ஈட்டி , அதன்மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவார்கள். அந்த வகையில் இந்த வாரம் குஷ்பு கலந்துக்கொள்ள, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நித்தியா என்ற பெண்ணும் இதில் கலந்துக்கொண்டார்.

kushbu

நடிகை குஷ்புவும், நடிகர் விஷாலும் இயல்பாகவே உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். இந்த நிலையில் நடிகை குஷ்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக துணி கடையில் புடவை விற்பதற்க்காக சென்றுள்ளார்.

அபொழுது ரசிகர் ஒருவர் குஷ்புவிடம், உங்கள் கணவர் சுந்தர் சி வேறொரு நடிகையோடு டூயட் பாடும்போது உங்களின் மனநிலை என்ன என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த குஷ்பு, தலைநகரம் படத்தில் எனது கணவர் வேறொரு பனுடன் டூயட் படும்போது நான் பதறி போனேன். எனது கணவர் வேறொரு பெண்ணை தொட்டு டூயட் படுகிறாரே என்று. பிறகு சினிமா தானே என்று என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன் என கூறினார்.