அந்த குடிகெடுத்தவன் எமனா வந்து என் வாழ்க்கைல விளையாடிட்டானே, ஆவேசமாகி பொங்கியெழுந்த கஞ்சாகருப்பு .!

அந்த குடிகெடுத்தவன் எமனா வந்து என் வாழ்க்கைல விளையாடிட்டானே, ஆவேசமாகி பொங்கியெழுந்த கஞ்சாகருப்பு .!



kanja karuppu cheated by director in velmurugan porwels

தமிழில் பருத்திவீரன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர்  நடிகர் கஞ்சா கருப்பு, காமெடி நடிகராக பல படங்களில் நடித்த இவர் தனது நடிப்பால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே  மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்தார் , அதனால் அவர் பெரும் கடனில் அவதிப்பட்டார்.

kanjakaruppu

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கஞ்சாகருப்பு,

வேல்முருகன் போர்வெல் என்ற படத்தை தயாரித்து  நான் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். பாலா மற்றும் அமீர் அப்பவே சொன்னாக, தயாரிப்பு என்பது அவ்வளவு எளிதல்ல, ஆழம் தெரியாம காலை விடாதேன்னு சொன்னாங்க, நான்தான் அதை கேட்காம கோபி என்ற என்னை ஏமாத்திட்டான், டைரக்டர்ங்கிற பேர்ல எமனா வந்து என் வாழ்க்கையில விளையாடிட்டான்.kanjakaruppu

இப்பவும் பெரிய டைரக்டர்கள் பேரச் சொல்லி அவர்களிடம் அசிஸ்டெண்டா இருக்கேன்னு பலரையும் ஏமாத்துறான் . கோபி மாதிரி குடி கெடுப்பவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த ஜென்மத்தில் படமே எடுக்கப்போவதில்லை என்று கஞ்சா கருப்பு வருத்ததுடன்  தெரிவித்துள்ளார்.