ஏன் இவ்வளவு ஆவேசம்.! கொந்தளித்துப் போய் அடுக்கடுக்காக சேரன் வெளியிட்ட பதிவு.!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 105 நாட்கள் விறுவிறுப்பாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களும் ஒருவராக கலந்துகொண்டவர் தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் சேரன்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அவர் வயது ஒரு தடையில்லை என்பதற்கேற்ப அங்கிருந்த இளைஞர்களுக்கு இணையாக போட்டிகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் சேரன் பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளர் என்பதையும் தாண்டி நல்ல அப்பாவாகவும் , அண்ணனாகவும், நண்பனாகவும் விளங்கினார். மேலும் அனைவருக்கும் அறிவுரை வழங்கி நல்வழிப்படுத்தியும் வந்தார்.
இந்நிலையில் தற்போது சேரன் சமூக வலைதளங்களில் கட்சித் தலைவர்களை மோசமாக விமர்சனம் செய்பவர்களையும், நடிகர்களை தரம் தாழ்த்தி பேசுபவர்களுக்கும் அறிவுரை வழங்கும்படி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசத்துடன் பதிவுகளை அடுக்கடுக்காக வெளியிட்டு வருகிறார்.
கட்சித்தலைவர்களின் இத்தனை வருட பொதுச்சேவை உழைப்பு மக்களுக்கான ப்ரச்னைகளில் முன்னெடுப்பு இவற்றை கருத்தில் கொள்ளாமல்
— Cheran (@directorcheran) October 22, 2019
அனுதாபிகள் என்ற பெயரில்
தரம் தாழ்த்தி பேசும் நியாயமற்ற செயல்களை ஆபாச பதிவுகளை வன்மையாக கண்டிக்கிறோம்..
நிறுத்துங்கள் போதும்..#CheranFansAgainstCyberBullying pic.twitter.com/Nvt9fQQpEz
ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும்நிலை வளர்ந்துவிட்டது..
— Cheran (@directorcheran) October 22, 2019
சிலரின் மனதில் காட்டுப்பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்..#CheranFansAgainstCyberBullying pic.twitter.com/rCOnz6tlcg
நடிகர்களின் இத்தனை வருட உழைப்பை மதிக்காமல் அவர்களின் முன்னேற்றத்தின் காரணம் அறியாமல்
— Cheran (@directorcheran) October 22, 2019
ரசிகர்கள், விமர்சகர் என்ற பெயரில் போலியானவர்கள்
ஆபாச வார்த்தைகளால் சமூக வளைதளங்களில்
பேசுவதை பதிவிடுவதை எதிர்க்கிறோம்...#CheranFansAgainstCyberBullying pic.twitter.com/rSN4QzNoTk