கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
#Breaking: நடிகர் விஜயின் மீது புகார் செருப்பு வீசிய விவகாரம்; காவல் நிலையத்தில் புகார்.!

கடந்த டிசம்பர் 28ம் தேதி, தேமுதிக தலைவர் மற்றும் மூத்த திரைப்பட நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அவரின் மறைவுக்கு திரையுலகையை சேர்ந்த பலரும் நேரில் வந்து தங்களின் இரங்கலை பதிவு செய்தனர்.
நடிகர் விஜயும் நேரில் வந்து தனது மரியாதை செலுத்தினார். அச்சமயம் நடிக்கற் விஜயின் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தி, ஒருசிலர் அவரை அங்கிருந்து செல்லக்கூறி சர்ச்சை செயலை மேற்கொண்டனர். இது விவாதமாக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் விஜயின் மீது செருப்பு வீசிய விவகாரம் தொடர்பாக, தென்மண்டல விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.