'நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம்'.. ஓபனாக பேசிய பப்லு பிரித்திவிராஜ்.!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகராக வளம் வந்தவர் பப்லு என்றழைக்கப்படும் பிரித்திவிராஜ். இவர் நடிகர் அஜித்குமார் உடன் இணைந்து நடித்த அவள் வருவாளா, கார்த்தியுடன் பொன்னுமணி போன்ற படங்களில் நடித்த கதாபாத்திரங்கள் இன்றளவும் ரசிக்கும்படியாக உள்ளது.
இதனிடையே பட வாய்ப்புகள் குறைந்ததால் ஒரு சில கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். இதனையடுத்து சின்னத்திரையில் கால் தடம் பதித்து பல சீரியல்களில் நடித்து வந்தார். அதிலும் குறிப்பாக இவர் நடித்து வந்த கண்ணான கண்ணே சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது 57 வயதாகும் பப்லு ப்ரிவிராஜ், 27 வயது மலேசிய இளம்பெண் ஒருவருடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். இதனையடுத்து இருவரும் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது பிரித்திவிராஜ் தனது இளம் வயது காதலியை பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நடிகர் பிரித்திவிராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.
அதில், பேசிய அவர், நான் வாழ்க்கையில் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன். எனது தனிப்பட்ட விஷயங்களை இனி யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டேன். எனது வாழ்வைப் பற்றி கேலி, கிண்டல் செய்ய நானே ஏன் வழி கொடுக்க வேண்டும். இந்த வயதிலும் என்னை அனைவரும் அழகாக இருப்பதாக கூறுகிறார்கள். இனியும் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பதை வெளியே கூறி அவமானத்தை தேடிக்கொள்ள மாட்டேன். முன்பு செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என அவர் கூறியுள்ளார்.