பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு திடீர்னு என்ன ஆச்சு.? இப்படி ஆகிட்டாங்களே.!
உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு என்னாச்சு.. வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.?
உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு என்னாச்சு.. வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் முதன்முதலில் 'ஜீன்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே மிகப் பெரும் வெற்றியைப் பெற்று தந்தது. தனது நடிப்பு திறமையாலும், அழகினாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதன் தொடர்ச்சியாக தமிழில் திரைப்படங்கள் நடித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்குப் பிறகு காலடியெடுத்து வைத்தார். மேலும் இந்தி நடிகர் அபிஷேக் பச்சானை திருமணம் செய்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு தாயனார்.
இதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இந்தியாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தனது இடத்தை நிலை நாட்டிய ஐஸ்வர்யா ராய் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராய், தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார். இவ்வாறு சமீபத்தில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் மிகவும் வயதான தோற்றத்தில், முகத்தில் சுருக்கங்களுடன் காணப்படுகிறார். இதனால் ஐஸ்வர்யாராய்க்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் பதட்டத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.