கணவரை இழந்த மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறாரா! முழு விபரம் உள்ளே....

கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பதோடு, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை மேக்னா ராஜ். தமிழில் 'காதல் சொல்ல வந்தேன்', 'உயர்திரு 420', 'நந்தா நந்திதா' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேக்னா ராஜ் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து மேக்னா கர்ப்பமாக இருக்கும்போதே சிரஞ்சீவி மாரடைப்பால் உயிரிழந்தார். கணவரை இழந்த பெரிய துயரத்தையும் தாங்கி, தன் மகனுடன் மட்டும் வாழ்க்கையை முன்னெடுத்து வந்தார் மேக்னா.
சிரஞ்சீவியின் மறைவுக்குப் பிறகும் அவர் தன்னுடன் இருப்பதாகவும், தன் மகனாகவே பிறந்துவிட்டதாகவும் நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார் மேக்னா. தன் தனிமையை மறக்க, மீண்டும் சினிமாவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கன்னடம் மற்றும் மலையாளம் மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: மாஸ் தான்... இனி இவர்களும் அய்யானர் துணை சீரியலில் நடிக்குறாங்கலாம்...! எதிர்பார்பில் ரசிகர்கள்....
இந்நிலையில், மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளார் என்ற வதந்தி சமீபத்தில் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இந்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் சிரஞ்சீவியுடன் இருக்கும் புகைப்படத்தையும், உணர்ச்சிபூர்வமான பதிவையும் பகிர்ந்துள்ளார்.
அதில்,
"எத்தனை ஜென்மம் எடுத்தாலும், எனது கணவர் சிரஞ்சீவி தான். என் வாழ்க்கையில் இனி யாருக்கும் இடமில்லை." என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிலர் திருமணம் செய்து கொள் என்கிறார்கள், சிலர் குழந்தையை பார்த்துக்கொள் என்கிறார்கள். எதை கேட்பது என எனக்கே புரியவில்லை. ஆனால் என் கணவர் எப்போதும் சொல்வது போல, இந்த நிமிடத்தை வாழ வேண்டும் என்பதே எனது தாரகமந்திரம். எனவே என் மகனின் எதிர்காலத்தை மட்டும் நினைத்து நான் வாழ்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
இளம் வயதிலேயே கணவரை இழந்த மேக்னாவை, மறுமணம் செய்து கொள்வதில் தவறில்லை என அவரது குடும்பத்தினரே வற்புறுத்துவதாகவும் சில செய்திகள் வந்துள்ளன. ஆனால், மேக்னாவின் சமீபத்திய பதில், அவரின் மனநிலையை சிதைக்க எந்த வதந்தியும் முடியாது என்பதை தெளிவாக காட்டுகிறது.
இதையும் படிங்க: அடி தூள்.... பாக்கியா வைத்த செக்கில் வாயடைத்துபோன சுதாகர்! எதிர்பாராத சுவாரஷ்யம் இதோ...