"கவர்ச்சியில்லாமல் சினிமாவில் நீடிக்க முடியாது" ஐஸ்வர்யா லட்சுமி கருத்து!



Actress aiswarya lakshmi openup about glamour role in cinema

கேரளாவில் பிறந்த ஐஸ்வர்யா லட்சுமி, ஒரு மாடல் அழகியாக தன் பயணத்தை தொடங்கினார்.  2017ம் ஆண்டு விஷால் நடித்து வெளியான "ஆக்க்ஷன்" படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை.

aiswarya

அதன்பின்னர், ஐஸ்வர்யா லட்சுமி தனுஷுடன் "ஜகமே தந்திரம்" என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துப் பிரபலமானார். ஆனால் இந்த எல்லா படங்களையும் விட, அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது பொன்னியின் செல்வன் படத்தில் அவர் நடித்த பூங்குழலி கேரக்டர் தான்.

இதையடுத்து உலகளவில் பூங்குழலியாகப் பிரபலமடைந்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி, தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த "கட்டா குஸ்தி" படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

aiswarya

இந்நிலையில் ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா லட்சுமி, " கவர்ச்சியில்லாமல் இப்போதெல்லாம் சினிமாவில் நீடிக்க முடியாது. ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் போக போக கவர்ச்சி காட்டி தான் ஆக வேண்டும்" என்று கூறியுள்ளார். இவர் சமீபகாலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, கவனத்தைக் கவர்ந்து வருகிறார்.