போலீஸ்காரரை சுற்றி வளைத்து அடித்த பெட்ரோல்பங் ஊழியர்கள்! ஒரு நம்பர் மாறியதால் வந்த வினை! அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்...

பீகார் மாநிலத்தின் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள சஹியாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு போலீஸ்காரர், தனது இருசக்கர வாகனத்தில் ரூ.120 மதிப்புள்ள பெட்ரோல் நிரப்ப ஒரு பங்கிற்கு சென்றுள்ளார். ஆனால் ஊழியர் தவறுதலாக ரூ.720 வரை பெட்ரோலை நிரப்பியதால், இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தின் போது, காவலர் அந்த ஊழியரை அறைந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கொண்டு பதிலடியாக, அந்தப் பெட்ரோல் பங்கில் பணியாற்றிய மற்ற ஊழியர்கள் காவலர்மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
30 வினாடியில் 10 முறை தாக்குதல்
வெறும் 30 வினாடிகளில், அந்த காவலர் மீது 10 முறை தடியால் தாக்கியதாக வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக போலீசார் வந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்னிலையில் போலீசாரை தாக்கிய சம்பவம், காவல்துறையின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளது.
बिहार: सीतामढ़ी जिले का एक वीडियो सामने आया है, जिसमें पेट्रोल पंप कर्मचारी एक पुलिसकर्मी की पिटाई करते नजर आ रहे हैं. दरअसल पुलिसकर्मी ने ₹120 का पेट्रोल डालने को कहा था, लेकिन पेट्रोल पंप कर्मी ने गलती से ₹720 का पेट्रोल भर दिया. इससे नाराज़ पुलिसकर्मी ने कर्मचारी को थप्पड़… pic.twitter.com/SrJl2JDQON
— NDTV India (@ndtvindia) July 5, 2025