அதுக்குள்ள போய் தலையை விடலாமா... 30 லட்சம் பேர் பார்த்த பயங்கரம்..! மலைப்பாம்புக்குள் தலையை விட்ட நபர்...! பகீர் வீடியோ..!!!
சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ் மற்றும் வியூஸ்களைப் பெறும் நோக்கில் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், மிகப்பெரிய மலைப்பாம்பின் அருகே நின்று ஆபத்தான செயலில் ஈடுபட்ட நபரின் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சிகள் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
மலைப்பாம்பின் வாய்க்குள் தலையை நுழைத்த நபர்
வைரலாகும் வீடியோவில், ஒருவர் எந்தவித அச்சமும் இல்லாமல் ஒரு பெரிய மலைப்பாம்பு அருகே நிற்பது காணப்படுகிறது. பாம்பு தங்களுக்கு பழகியதாகவும் ஆபத்து ஏற்படாது என்றும் நம்பிய அவர், மெதுவாக தனது தலையை அதன் திறந்த வாய்க்குள் நுழைக்க முயற்சிக்கிறார். அப்போது அருகிலிருந்த சிலர் அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர்.
அடுத்த நொடியில் பதற்றமான திருப்பம்
சில விநாடிகளில் நிலைமை திடீரென மாறியது. தலையை நெருங்கியவுடன் மலைப்பாம்பு ஆக்ரோஷமாக செயல்பட்டு அவரைக் கவ்வ முயன்றதாக வீடியோவில் தெரிகிறது. இதனால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அலறியபடி அவரை மீட்க ஓடி வந்தனர். ஆனால் அதன்பின் என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. வீடியோ அந்த தருணத்திலேயே முடிவடைகிறது.
இதையும் படிங்க: அனகோண்டா பாம்பின் வாய்க்குள் சிக்கிய தலை! 15 வினாடி மரண போராட்டம்..... அதிர்ச்சி வீடியோ!
நெட்டிசன்கள் கண்டனம்
'@WolfprwX' என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோ இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வனவிலங்குகள் எவ்வளவு அமைதியாகத் தோன்றினாலும் அவை இயல்பாகவே ஆபத்தானவை என்பதையும், இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
A snake is always a snake. pic.twitter.com/UT1QdqkxRK
— Wolf (@WolfprwX) June 12, 2026
இதையும் படிங்க: தடுப்புச் சுவரில் தண்ணீர் குடிக்க அமறும் போது தலை குப்புற கீழே விழுந்த நபர்! வைரல் வீடியோ தரும் எச்சரிக்கை!!!