ஆசிரியைக்கு பாலியல் தொல்லை.. உதவி தலைமை ஆசிரியர் அதிரடி கைது.! 



Tamil Nadu Assistant Headmaster Arrested for Alleged Sexual Harassment of Woman Teacher

உடன் பணியாற்றி வரும் சகஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

உதவி தலைமை ஆசிரியர்: 

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், காந்தி நகரில் வசித்து வருபவர் பஞ்சராஜா (வயது 56). இவர் சங்கரன்கோவில், பெரியகோவிலான்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில், உதவி தலைமை ஆசிரியராக இருக்கிறார். 

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

பாலியல் தொல்லை: 

இதே பள்ளியில் ஆசிரியையும் பணியாற்றி வரும் நிலையில், பஞ்சராஜா ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயம் குறித்து ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

Crime news

விசாரணை: 

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து, உதவி தலைமை ஆசிரியர் பஞ்சராஜா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவல்துறை அதிகாரி போக்ஸோவில் அதிரடி கைது.!