இங்க.. காசு கேக்குறாங்க.. ! மேடையிலே கம்ப்ளைன்ட் கொடுத்த பாட்டி ! புஸ்ஸி ஆனந்த் அடுத்த நொடி சொன்ன அந்த ஒரு பதில்.. வைரல் வீடியோ..!!!



bussy-anand-funny-response-public-event-tvk

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற பொதுநிகழ்ச்சியில், மூதாட்டி ஒருவர் தெரிவித்த புகாருக்கு அவர் அளித்த நகைச்சுவை கலந்த பதில் அங்கிருந்த தொண்டர்களையும் பொதுமக்களையும் சிரிப்பில் ஆழ்த்தியது. அந்தக் காணொளி சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்று வருகிறது.

மூதாட்டியின் புகாரால் சுவாரசியமான தருணம்

நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் உரையாடிக் கொண்டிருந்த புஸ்ஸி ஆனந்திடம், மூதாட்டி ஒருவர் திடீரென வந்து சிலர் தன்னிடம் பணம் கேட்பதாகக் கூறி புகார் தெரிவித்தார். இதைக் கவனமாகக் கேட்ட அவர், பதற்றப்படாமல், “யார் பணம் கேட்டாலும் கண்டிப்பாக கொடுக்காதீங்க. அதெல்லாம் அந்தக் காலம்... இப்போது அப்படி இல்லை” என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

இதையும் படிங்க: கடவுளே... காப்பாத்து! எத்தன்னை தடைகள் வந்தாலும் என் தலைவன் முதல்வர் ஆகணும்.! விஜய் வீட்டு வாசலில் கதறி அழுத தவெக தொண்டரின் வீடியோ!!!

விஜய்யை குறிப்பிட்டு எச்சரிக்கை

தொடர்ந்து பேசிய அவர், தவெக தலைவர் விஜய்யின் கண்டிப்பான அணுகுமுறையை சுட்டிக்காட்டி, “யாராவது காசு கேட்டா கொடுத்துடாதீங்க. மீறி கொடுத்துட்டு விஷயம் தெரிஞ்சா, முதலமைச்சர் விஜய் பிச்சி எடுத்துருவாரு” என்று சிரிப்பூட்டும் வகையில் பேசினார். அவரது இந்தப் பேச்சு அங்கிருந்தவர்களிடையே கைதட்டலையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில் வைரலான காணொளி

எளிமையாகவும் இயல்பாகவும் பொதுமக்களுடன் உரையாடிய விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் பதிவான இந்த தருணத்திற்கு தவெக தொண்டர்கள் மட்டுமின்றி பலரும் வரவேற்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: இதுதான் விஜய்யின் சிறப்பு! பதவியேற்பு விழாவில் நடந்த ரகசியத்தை மேடையில் போட்டுடைத்த வைகோ..! உச்சி முகர்ந்து பாராட்டு..!!!