மெடிக்கல் ஷாப்பிற்கு சென்ற கணவர்...! ஸ்கூட்டியில் காத்திருந்த பெண்ணை குறிவைத்த கொள்ளையர்கள்...பட்டப்பகலில் நடந்த பயங்கர காட்சி!!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள துர்காபுரா சந்தைப் பகுதியில் பட்டப்பகலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. கணவர் மருந்தகத்திற்குச் சென்றிருந்த நிலையில், ஸ்கூட்டரில் காத்திருந்த மோனா ஜெயினை பைக் கொள்ளையர்கள் குறிவைத்துள்ளனர். திடீரென நடந்த பறிப்புக்குப் பிறகு, அவர் கொள்ளையனை துணிச்சலுடன் விரட்டிச் சென்றார்.
ஸ்கூட்டரில் காத்திருந்த பெண்ணை குறிவைத்த கொள்ளையர்கள்
சங்கனேர் பகுதியைச் சேர்ந்த மோனா ஜெயின், துர்காபுரா சந்தைப் பகுதியில் தனது கணவருக்காக ஸ்கூட்டரில் காத்திருந்தார். அப்போது பைக்கில் வந்த கொள்ளையர்களில் ஒருவர், பின்னால் இருந்து அவரை நெருங்கி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை திடீரென பறித்துள்ளார். எதிர்பாராத தாக்குதலால் அவர் நிலைதடுமாறியபோதும், உடனடியாக சுதாரித்துக் கொண்டு திருடனை விரட்டிச் சென்றார்.
கூட்டாளியின் பைக்கில் ஏறி தப்பிய கொள்ளையன்
மோனா ஜெயின் துரத்தி வந்ததை பார்த்த கொள்ளையன், அருகே தயாராக நின்றிருந்த தனது கூட்டாளியின் பைக்கில் ஏறியுள்ளார். பின்னர் இருவரும் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றனர். சந்தையில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்த நேரத்திலேயே இந்த வழிப்பறி நடந்துள்ளது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார்
வழிப்பறி நடந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV Footage கேமராவில் பதிவாகியுள்ளன. தகவல் அறிந்த பஜாஜ் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தக் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தப்பியோடிய இரு கொள்ளையர்களையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
A chain-snatching incident took place in broad daylight at Durgapura Market in Jaipur on Friday evening, with the victim herself chasing the accused after the theft.
— IndiaToday (@IndiaToday) September 19, 2026
Mona Jain, a resident of Sanganer, was waiting on her scooter while her husband went to a medical shop when two… pic.twitter.com/MqXC6buEKW