ஐயோ... ஒரு நொடியில் உயிர் தப்பினாரா? நடிகர் கிரண் ராஜை கீழே தள்ளிய சிங்கம்! அதிர்ச்சி வீடியோ..!!!
முதலைக்கு முழு கோழியை உணவளிக்க சென்ற ஊழியர்! அடுத்த நொடி அவரையே இறையாக்கிய ராட்சத முதலை.. 1 மணி நேர மரண போராட்டம்! கடைசியில் சுட்டுக்கொன்று நடந்த அதிர்ச்சி... பகீர் வீடியோ!!!
பப்புவா நியூ கினியாவில் முதலைக்கு உணவளிக்கச் சென்ற பூங்கா ஊழியர் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்தப்பட்டது. காலைக் கவ்விய முதலை அவரை ஆழமான நீருக்குள் இழுக்க முயன்றது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அதன் பிடியில் சிக்கியிருந்த தொழிலாளி, போலீசார் முதலையைச் சுட்டுக் கொன்ற பின்னரே மீட்கப்பட்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோழி இறைச்சியை காட்டியபோது திடீரென பாய்ந்த முதலை
பப்புவா நியூ கினியா தலைநகர் போர்ட் மோர்ஸ்பி பகுதியில் உள்ள பிரபல சாகசப் பூங்காவில் கடந்த சனிக்கிழமை மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர், முதலையின் அடைப்புப் பகுதிக்குச் சென்று கோழி இறைச்சியை காட்டி அதற்கு உணவளிக்க முயன்றுள்ளார்.
இதையும் படிங்க: 12 குழந்தைகள்... 9 வயதில் தொடங்கி 9 ஆண்டுகள் நீடித்த கொடுமை! பெற்ற மகள்களையே சீரழித்த கணவன்! தூதுபோன தாய்..... அதிரவைக்கும் உண்மை பின்னணி!!!
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் முதலை திடீரென பாய்ந்து அவரது காலைக் கவ்வியது. பின்னர் அவரைத் தண்ணீருக்குள் இழுத்துச் செல்ல முயன்றது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அந்த ஊழியர் அருகில் இருந்த குளத்தின் மேட்டைப் பிடித்தபடி போராடியுள்ளார். அருகில் இருந்தவர்களும் அவரை மீட்க முயன்றனர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த போராட்டம்
நேரில் பார்த்த கிப்சன் ஜான் என்பவர் ஏபிசி ஊடகத்திடம் கூறுகையில், முதலை ஊழியரைக் கவ்வியதும் தண்ணீருக்குள் இழுக்க முயன்றதாக தெரிவித்தார். கடும் வலியில் சிக்கியிருந்த அவர், சரியாகக் கத்தக்கூட முடியாத நிலையில் இருந்ததாகவும், அவரது முகத்தில் தெரிந்த பயம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்ததாகவும் அவர் கூறினார்.
நிலைமை கட்டுக்குள் வராததால் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். முதலை தாக்குதல் தொடர்ந்து நீடித்த நிலையில், வேறு வழியின்றி போலீசார் முதலையைச் சுட்டுக் கொன்றனர். அதன்பிறகே ஊழியரை அதன் பிடியிலிருந்து மீட்க முடிந்தது.
ஒரு காலை இழந்த நிலையில் சிகிச்சை;
மீட்கப்பட்ட ஊழியர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாக்குதலில் அவரது ஒரு கால் முழுமையாக இழந்திருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் வடக்கு பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்தவர் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த சாகசப் பூங்காவில் பணியாற்றி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Port Moresby பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, பூங்கா அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது. வனவிலங்குகளுடன் நெருக்கமாக செயல்படும்போது பாதுகாப்பு விதிகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
Papua New Guinea 🇵🇬:A Crocodile 🐊keeper at the Adventure Park in Port Moresby, 14 Mile, was attacked by his own crocodile.Police 👮shot the crocodile dead and saved the man, although both of his legs were bitten off by the crocodile. pic.twitter.com/arYA3MnJfl
— marknehpets (@mapkpets) September 5, 2026
இதையும் படிங்க: கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழாவில் நடந்த உயிர் சேதம்! 2 பேர் பரிதாப பலி.... 212 பேர் படுகாயம்! நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!