1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு எந்த நிலைமையில இருக்குன்னு பாருங்க! என்னுடைய கண்ணே போயிடுச்சு... புறவால் புலம்மி கண்ணீர் விடும் வாலிபர்!!!



noida-luxury-flat-pigeon-problem-video-viral

நோய்டாவில் கோடி ரூபாய் செலவில் வாங்கிய சொகுசு ஃபிளாட்டில் கடும் சுகாதார சிக்கல்கள் இருப்பதாக இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 22-வது மாடியில் உள்ள வீட்டில் வசிக்கும் அவர், வெளியுறையின் மோசமான நிலை குறித்து நேரடியாக பதிவு செய்துள்ளார்.

அந்த இளைஞர் ஆதர்ஷ், வீட்டின் உள்ளக அலங்காரத்தை நன்றாக செய்திருந்தாலும், வெளிப்புற சூழல் வாழ முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். குறிப்பாக, புறாக்கள் தொல்லை அதிகரித்திருப்பதால் பால்கனி பகுதி முழுவதும் கழிவுகள் குவிந்து, அங்குப் புழுக்கள் மற்றும் பூச்சிகள் பரவி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பால்கனியில் அசுத்தம்... குடியிருப்பில் கடும் பாதிப்பு

தகவலின்படி, அடுக்குமாடி குடியிருப்பின் பல பகுதிகளில் புறாக்கள் கூட்டமாக தங்கியுள்ளன. அவற்றின் கழிவுகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் துர்நாற்றமும், அசுத்தமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பால்கனியில் நிற்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் தினமும் மனைவிக்கு ஹாரன் அடிக்கும் கணவர்! ஜன்னலில் காத்திருக்கும் மனைவி..... கணவன் - மனைவி அன்பின் வீடியோ..!!!

கண்களில் பாதிப்பு... பாதுகாப்பு முயற்சியும் பலனின்றி

இந்த சூழலில் இருந்து உருவான கிருமிகள் காரணமாக தனது கண்களில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிவந்த நிலையில் கண்களை வீடியோவில் காட்டியுள்ளார். இதையடுத்து, பால்கனியில் வலை மற்றும் கதவுகள் அமைத்தும் நிலைமை மாற்றமின்றி இருப்பதாக அவர் கூறுகிறார். இத்தகைய சுகாதார பிரச்சினை தொடர்ந்தால், குடியிருப்போரின் உடல்நலத்திற்கே ஆபத்து ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கிறார்.

“இத்தனை பணம் கொடுத்து வாங்கியது இதற்காகவா?”

ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய வீட்டில் இத்தகைய நிலை எதிர்பார்க்கவில்லை என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். பல லட்சங்கள் செலவில் ஃபிளாட் வாங்குவதை விட, தனி வீடு அல்லது சொந்த நிலத்தில் வீடு அமைப்பதே நல்லது எனவும் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: அதிர்ச்சி காட்சி! டீ குடித்த அடுத்த நொடியே சரிந்து விழுந்த 29 வயது ரயில்வே ஊழியர்! மூன்று நிமிடங்களில் பறிப்போன உயிர்.... ஈரக்கொலை நடுங்க வைக்கும் காட்சி!!!