கொரோனா வைரஸால் முதல் 6 மாதத்தில் 3.30 கோடி பேர் இறக்க நேரிடும்..! ஒரு வருடத்திற்கு முன்பே வெளியான தகவல்..!
கொரோனா வைரஸால் முதல் 6 மாதத்தில் 3.30 கோடி பேர் இறக்க நேரிடும்..! ஒரு வருடத்திற்கு முன்பே வெளியான தகவல்..!
உலகம் முழுவதும் வேகமாக பரவும் ஒரு சூப்பர் வைரஸால் முதல் 6 மாதங்களில் 3.30 கோடி பேர் இறக்க நேரிடும் என ஓராண்டுக்கு முன்பே மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கணித்து ஒரு கூட்டத்தில் பேசியது தற்போது வைரலாகிவருகிறது.
உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கடந்த ஆண்டு மாசாசூட்ஸ் மருத்துவ சங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், வேகமாக பரவும் ஒருவிதமான சூப்பர் வைரஸால் இந்த உலகம் பாதிக்கப்பட்ட இருக்கிறது.
இந்த வைரஸ் தீவிரமடையும் பட்சத்தில் இந்த வைரசால் முதல் 6 மாதத்தில் 3.30 கோடி பேர் இறக்க கூடும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த வைரஸ் தாக்குதலால் உலகப்போர் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து காத்துக் கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என பில்கேட்ஸ் ஒரு ஆண்டுக்கு முன்பு பேசியிருந்தது தற்போது வைரலாகிவருகிறது.