27 நாட்களில் பண பிரச்சனைகளை தீர்க்கும் ரகசியம்.! சித்திரை வெள்ளியில் இதை செய்யுங்கள்.! 

27 நாட்களில் பண பிரச்சனைகளை தீர்க்கும் ரகசியம்.! சித்திரை வெள்ளியில் இதை செய்யுங்கள்.! 



Chithirai friday pooja for money making

சித்திரை மாதத்தின் வெள்ளிக்கிழமையில் செய்யக்கூடிய இந்த பரிகாரம் உங்களது வாழ்வில் ஏற்படும் பணக்கஷ்டம் பலவற்றை போக்கக்கூடியது. அதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். 

இதற்கு தேவையான பொருட்கள் : 

வெள்ளை சர்க்கரை

ஏலக்காய்

ஒரு சிறிய பாத்திரத்தில் 3 ஸ்பூன் அளவு வெள்ளை சர்க்கரையை எடுத்து வைக்கவும். இது பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாத்திரமாக இருக்க வேண்டும். வெள்ளை நிறம் என்பது சுக்கிரனின் நிறம். பிரகாசம், வெண்மை, தூய்மை போன்றவற்றை இது குறிப்பதாகும். சுக்ரனின் அருளை பெறுவதற்கு தான் இந்த பரிகாரம். சுக்கிர பகவான் தான் சுபிட்சமான வாழ்க்கையை நமக்கு தரக்கூடியவர். இந்த சுக்கிரனின் அருளை பெற வெள்ளிக்கிழமை என்பது மிகவும் சிறப்பான நாளாகும். இந்த பூஜையை பூஜையறையில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டின் முற்றம், படுகையறை உள்ளிட்ட எந்த இடத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். 

சித்திரை

வெள்ளை சர்க்கரை உள்ள பாத்திரத்தில் செழிப்பாக இருக்கும் பச்சை நிற 3 ஏலக்காயை வைக்க வேண்டும். உங்கள் வீட்டின் தென்மேற்கு பகுதியில் இதை வைக்க வேண்டும். அந்த இடம்தான் வீட்டின் குபேர மூலை. அந்த மூலையில் இந்த சர்க்கரை, ஏலக்காய் உள்ள பாத்திரத்தை வைக்க வேண்டும். இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் இதை செய்யலாம். எந்த நாள் இதை நாம் வைக்கிறோமோ? அதிலிருந்து தொடர்ந்து 27 நாட்களுக்கு இந்த பூஜையை மேற்கொள்ள வேண்டும். இந்த சர்க்கரை ஏலக்காய் அடங்கிய பாத்திரத்தை வலது கையில் வைத்து தென்மேற்கு மூலையை பார்த்து, "பணம் வருக வருக! பணம் வருக வருக!" என்று கூற வேண்டும். 

சித்திரை

நம்முடைய எந்த மாதிரியான பண பிரச்சனை தீர வேண்டுமோ? அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். நமக்கு யாரிடம் இருந்து பணம் வரவேண்டுமோ அதை நாம் மனதில் நினைத்துக் கொண்டு பணம் நமக்கு கிடைத்து விட்டதை காட்சிப்படுத்த வேண்டும். இவ்வாறு மனதில் பணத்தை ஈர்ப்பதைப் போல நினைத்து பணம் வசி வசி என்றோ, அல்லது பணம் வருக வருக என்றோ சொல்லும்போது நாம் பணத்தை ஈர்க்கிறோம். இதன் மூலம் பணத்தை பெறக்கூடிய ஆற்றல் நமக்கு கிடைக்கிறது. 27 நாட்கள் இந்த பூஜையை தொடர்ந்து நாம் செய்யும் போது நமது பொருளாதாரம் மேம்பாடு அடைவதை கண்கூடாக நீங்களே உணர முடியும்.